முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எது தவறு?

_*1 : பேசுவது தவறல்ல,*_ _தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!_  _*2 : ஆசைப்படுவது தவறல்ல,*_  _பேராசை கொள்வது பெரும் தவறு....!!_  _*3 : கோபம் கொள்வது தவறல்ல,*_  _நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!_ _*4 : அறியாமை தவறல்ல,*_ _அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!_ _*5 : வீழ்வது தவறல்ல,*_ _எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!_ _*6 : தவறிச் செய்வது தவறு.*_ _தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!_ _*7 : நாம் செய்யும் தவறை*_ _நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!_ _*8 : நம் தவறை நம் குடும்பத்தார்* அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!_

டிசம்பர் - 06: அம்பேத்கர் நினைவு நாள்.

* * எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ... எவன் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ... எவன் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்றிருக்கிறானோ...  அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். *-டாக்டர் அம்பேத்கர்*