முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

உழவர் திருநாளாம் மாட்டுப் பொங்கல்

💐💐💐🙏🏻🌹🌹🌹🌹🌹 *"இன்றைய சிந்தனை"*.( 16.01.2026 ) ............................... *"’’..* .................................. உழவர் தினம் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.  உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும்.  மாட்டுப் பொங்கலின் அன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கால் நடைகளை குளிப்பாட்டுவர்.  மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள்.  கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.   புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு , உழவுக் கருவிகளை சுத்தம் ...

எது தவறு?

_*1 : பேசுவது தவறல்ல,*_ _தேவையற்றதைப் பேசுவது மிகவும் தவறு..!_  _*2 : ஆசைப்படுவது தவறல்ல,*_  _பேராசை கொள்வது பெரும் தவறு....!!_  _*3 : கோபம் கொள்வது தவறல்ல,*_  _நியாயமற்றக் கோபம் மாபெரும் தவறு...!!_ _*4 : அறியாமை தவறல்ல,*_ _அறிந்துக் கொள்ள முயலாமை முற்றிலும் தவறு...!!_ _*5 : வீழ்வது தவறல்ல,*_ _எழ முயற்சி செய்யாமல் வீழ்ந்தே கிடப்பது தவறிலும் தவறு...!!_ _*6 : தவறிச் செய்வது தவறு.*_ _தவறு எனத் தெரிந்தப் பின் திருத்திக் கொள்ளாதது மாபெரும் தவறு...!!_ _*7 : நாம் செய்யும் தவறை*_ _நம்மைச் சார்ந்தோர் சொல்வதைக் கேட்காமல் அவர்களையே (நீங்கள் யார் என்னைக் கேட்க) என்பது மிகப் பெரிய தவறு...!!_ _*8 : நம் தவறை நம் குடும்பத்தார்* அம்மா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் எடுத்து உரைத்தால் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டால் நமக்குத் தான் நன்மை...!!_

டிசம்பர் - 06: அம்பேத்கர் நினைவு நாள்.

* * எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ... எவன் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ... எவன் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்றிருக்கிறானோ...  அவனே சுதந்திரமான மனிதன் என்பேன். *-டாக்டர் அம்பேத்கர்*

சென்னை IIT வருடா வருடம் நடத்தும் Shaashtra - Tech symposium நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முறை

சென்னை IIT வருடா வருடம் நடத்தும் Shaashtra - Tech symposium நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முறை.  ஜனவரி 2-6 வரை அனைவருக்கும் IIT என்ற புது நிகழ்வை அறிமுக படுத்துகிறது (Open House) IIT மெட்ராஸ் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் புதுமைகள், தொழில்நுட்பங்கள், ஆய்வகங்கள் — இவை அனைத்தையும் இந்தியா முழுவதும் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும். 90+ Labs & Centres IIT-M இன் முக்கியமான துறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டன. எந்த துறையின் மாணவராக இருந்தாலும், cutting-edge innovation-ஐ நேரில் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லாரையும் முடிஞ்சா கூட்டிட்டு போயி அவங்களுக்கு ஸ்டெம் மேல ஒரு ஈடுபாடு யற்படுத்த ஒரு நல்ல நிகழ்வு கண்டிப்பா வாய்ப்பு இருக்குற ஆட்கள் போங்க மேலதிக தகவல்கள்: shaastra.org/open-house

நவம்பர் 20 - சர்வதேச குழந்தைகள் உரிமைகள் தினம்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* * International Child Rights Day*            ஐ.நா-வின் யுனிசெஃப் எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20, உலகக் குழந்தைகள் உரிமைகள் தினம் என அறிவித்துள்ளது. குழந்தைகள் நலனுக்காகக் கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது.      உலக மக்களிடையே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டமாக்கப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து #GoBlue என்ற பிரசாரத்தை நடத்திவருகிறது.     நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு. யுனிசெஃப்புக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.      சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, #GoBlue பிரசாரத்துக்காக, ராஷ்ட்ரபதி பவன், ஐ.நா சபை கட்டடம், மும்பை சத்ரபதி சிவாஜ...

உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5

ஆசிரியன் என்பவன் மாணவச் சமூகத்தை உருவாக்குபவன் அல்லன் மாறாக உயிரூட்டுபவன். ஒரு சிறந்த ஆசிரியனின் பண்புகளை, குணங்களை பார்க்கும் மாணவர்களின் மனதில் அப்படியே பதியும். எனவே ஆசிரியன் என்பவன்  தமது மாணவர்களின் காலக் கண்ணாடியாவான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஓர் ஆசிரியனுக்கு இருக்கிறது. வெறும் மாணவனாக பள்ளிக்கு வரும் அவனுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவனை சாதனையாளனாக ஆக்குபவன் ஆசிரியன். "எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய்  விளங்குபவன் ஆசிரியன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள்... வேறு எந்தப் பணிக்கும் கிடைக்காத பெருமை... ஓர் ஆசிரியனுக்கு உள்ளது என்பதற்கு... இந்தப் பழமொழியே சாட்சி. ஆசிரியன் என்பவன் கற்பிப்பவன் மட்டுமல்லன், என்றென்றும் கற்பவனும்கூட.